தமிழர்களை விட இஸ்லாமியர்களே எங்களை அதிகம் ஆதரிக்கிறார்கள்- நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்!

Date:

தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் போது எங்களை ஆதரிப்பதனை விடவும் , முஸ்லிம்களின் பக்கத்திலிருந்து கிடைக்கின்ற ஆதரவு பெருமளவில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.கனடா வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தினருடனான சந்திப்பு நேற்று (24) டொராண்டோ நகரில் இடம்பெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் அனைத்து சமூகங்களுக்காகவும் குரல் கொடுக்கின்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்.சில இஸ்லாமிய அரசியல்வாதிகளிடம் ஒரு கருத்து இருக்கின்றது அதாவது, இவர் என்ன எங்களுடைய பிரச்சினைகளை கதைக்கின்றார் ,எங்களுக்காக பேசுகின்றார் என்கின்றனர்.எனினும் நான் அனைத்து பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுக்கின்றேன்.

அதிலும் முஸ்லிம் சகோதரர்கள் மத்தியில் அதி வரவேற்பு கிடைத்துள்ளது.தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் போது எங்களை ஆதரிப்பதனை விடவும் முஸ்லிம்களின் பக்கத்திலிருந்து கிடைக்கின்ற ஆதரவு பெரிதளவில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் குறிப்பிட்டார்.

எனக்கு முன்னர் உரையாற்றிய ஒருவர் சொன்னார் நாங்கள் அவர்களுக்கு வாக்களிப்போவதில்லையென அது உண்மை தான்.என்னை பொறுத்தவரையில் நான் அந்த வாக்குகளுக்காக எதனையும் செய்யவில்லை.கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் , இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக செயற்படாவிடின் எதிர்காலத்தில் பேரினவாதிகளின் ஆதிக்கம் கிழக்கு மாகாணத்தில் அதிகரித்து விடும் என்றார்.

https://m.facebook.com/story.php?story_fbid=442090857284912&id=100044520053805

Popular

More like this
Related

2025ம் ஆண்டில் அரபு சர்வாதிகாரிகள் இஸ்ரேலிடம் இருந்து 2.9 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளனர்

-லத்தீப் பாரூக் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் வழங்கப்பட்ட அதி நவீன...

ஊழியரை தாக்கிய பிரபல கொத்து கடை உரிமையாளர் கைது

இலங்கையின் முன்னணி கொத்து உணவு விற்பனையில் ஈடுபடும் சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர் தமது...

அரச ஊழியர்களுக்கு சொத்து விபரங்களை வழங்க ஒருவார காலவகாசம்

2023 ஆண்டின் இலக்கம் 9 என்ற ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய அரச...

மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வியின் மறைவுக்கு ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமி இரங்கல்!

இந்தியாவைச் சேர்ந்த  புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான மௌலானா சையத் சல்மான்...