வைத்தியசாலையிலிருந்து ரிஸ்வான் அரையிறுதிக்கு “ஒரு போர் வீரனைப் போல வந்தார்”- மெதிவ் ஹேடன்!

Date:

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.போட்டிக்கு முந்தைய நாள் பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், விக்கெட் காப்பாளருமான முஹம்மத் ரிஸ்வான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் என அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் மெதிவ் ஹேடன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.நேற்றைய ஆட்டத்தில் ரிஸ்வான் 52 பந்துகளில் 62 ஓட்டங்களை அதிரடியாக அடித்தார்.ஆட்டத்தின் முன்னைய நாள் நுரையீரல் பாதிப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் எனவும் , அவர் எப்படி அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஆட்டத்தில் கலந்து கொள்வார் என சந்தேகம் எழுந்தது ,முழு இரவும் மருத்துவமனையில் ரிஸ்வான் இருந்தார் மறு நாள் ” ஒரு போர் வீரனைப் போல களத்திற்கு வந்தார்” அவருடைய தைரியம் பாராட்டத்தக்கது என மெத்யு ஹேடன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், உண்மையில் இது ஒரு முரண்பாடு தான் .என் இதயம் எப்போதும் அவுஸ்திரேலியாவுக்காகத்தான் துடிக்கும்.ஆனால் நான் பாகிஸ்தான் அணியில் ஒரு பகுதியாக இருப்பதையே விரும்புகிறேன் என்றார்.

ரிஸ்வானின் நிலை பற்றி அணித்தலைவர் பாபர் அசாம் கூறும் போது, நான் ரிஸ்வானை பார்க்கும் போது சுகமடைந்த தோற்றத்தில் இருந்தார்.நான் அவரிடம் உடல் நலம் பற்றி விசாரித்தேன். “என்னால் இன்று விளையாட முடியும் என அவர் கூறினார்.அதே போலவே இன்று அவர் சிறப்பாக  விளையாடியுள்ளார் என்று தெரிவித்தார்.

 

அப்ரா அன்ஸார்

 

 

 

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...