அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Date:

சீமெந்து நிறுவனங்களினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலைக்கு அதிகமாக சீமெந்தை விற்பனை செய்வதனை கண்டறிவதற்கான சுற்றி வளைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

அதிக விலைக்கு சீமெந்தை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறித்த அதிகார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.தற்போது 50 கிலோகிராம் நிறையுடைய ஒரு மூட்டை சீமெந்து 1275 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும் குறித்த விலைக்கு அதிகமாக சீமெந்து விற்பனை செய்யப்படுவதாக பல பிரதேசங்களிலும் நுகர்வோர்   குற்றம் சுமத்தியுள்ளார்கள்.

Popular

More like this
Related

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...