சஹீரா சமீரினால் எழுதப்பட்ட “ஓயாத ஓலங்கள்” கவிதை தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு!

Date:

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவி சஹீரா சமீரினால் எழுதப்பட்ட “ஓயாத ஓலங்கள்” கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா கடந்த 2021 டிசம்பர் மாதம் 08 ஆம் திகதி புதன்கிழமை மடுள்போவ முஸ்லிம் மகா வித்தியாலய பிரதான மன்டபத்தில் நடைபெற்றது.கல்லூரி அதிபர் ஸைனுல் ஹுசைன் வரவேட்புரையுடன் நிகழ்வை துவக்கி வைத்தார்.

நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த ஊடகவியலாளரும், மாவனல்லை ஜே.எம் மீடியா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், தொலைக்காட்சி செய்திவாசிப்பாளருமான ராஷித் மல்ஹார்டீன் புத்தகத்தை வெளியிட்டு வைத்ததுடன் முதற் பிரதியையும் பெற்றுக்கொண்டார்.

நிகழ்வின் நூல் அறிமுக விழாவை சிரேஷ்ட  ஊடகவியலாளர் அமீர் ஹுசைன் நடத்தினார். நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், ஊர்மக்கள், தனவந்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்த்தனர்.

சஹீரா சமீர் ஆரம்பக் கல்வியை தல்கஸ்பீடியா முஸ்லீம் மகா வித்தியாலயத்திலும் உயர்கல்வியை ஹெம்மாதகமை மடுள்போவ முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் கற்றதோடு மாவனல்லை ஜே.எம் மீடியா ஊடகக் கல்லூரியில் ஊடகக் கற்கை நெறியையும் பூர்த்தி செய்துள்ளார்.

பவளவிழாக் காண இருக்கும் மடுல்போவை மு.ம.வி இன் பவளவிழாவை நோக்கிய செயற்திட்டங்களில் ஒன்றாகவே இப் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

Popular

More like this
Related

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

இலங்கை முழுவதும் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணி...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வரண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...