பிரியந்த குமார படுகொலை வழக்கில் பாகிஸ்தான் எடுத்துள்ள விசேட தீர்மானம்!

Date:

பாகிஸ்தான் சியால்கோட்டில் இலங்கையரான பிரியந்த குமார என்ற நபர் ஆர்ப்பாட்ட கும்பலால் அடித்துக் கொள்ளப்பட்ட வழக்கில் சந்தேக நபர்களுக்கான விசாரணை தினமும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் நீதி அமைச்சர் முஹம்மது பஷரத் ராஜா தலைமையில் நடைபெற்ற சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான பஞ்சாப் அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.இந்த வழக்கை 14 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு போலீஸ் புலனாய்வாளர்களுக்கு குழு உத்தரவிட்டது.

ஆர்ப்பாட்ட கும்பலால் அடித்துக்கொல்லப்பட்ட இலங்கை பிரஜை பிரியந்த குமாரவின் உயர்மட்ட வழக்கில் சியால்கோட் காவல்துறை அதிகாரிகளை லாகூரில் இருந்து சிறப்பு வழக்கறிஞர் குழு சந்திக்கவுள்ளது.இருப்பினும், குழு ராஜ்கோ இண்டஸ்ட்ரீஸ் சென்று தொழிற்சாலை இடத்தை ஆய்வு செய்யும். 100 க்கும் மேற்பட்ட கேமராக்களில் இருந்து பெறப்பட்ட சம்பவத்தின் 12 மணி நேர சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் வழக்குத் தொடுப்பார்கள்.மேலும், பஞ்சாப் முதல்வர் உஸ்மான் புஸ்தார், சந்தேக நபர்கள் மீதான விசாரணையை விரைவில் முடித்து, 14 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுவரை 139 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் அவர்களில் 34 பேர் முக்கிய சந்தேக நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...