பொதுநலவாய பளுதூக்கல் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு மேலும் மூன்று பதக்கங்கள்

Date:

தற்போது உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் பொதுநலவாய பளுதூக்கல் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை மேலும் மூன்று வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்தது.

நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 74 Kg (கிலோகிராம்) எடைப் பிரிவில் பங்குகொண்ட இந்திக திஸாநாயக்க, ஸ்னெட்ச் முறையில் 130kg கிலோ எடையையும், கிளீன் அண்ட் ஜேர்க் முறையில் 156kg கிலோ எடையையும் என மொத்தமாக 286kg கிலோ கிராம் எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.

மேலும், குறித்த போட்டியில் இந்தியா தங்கப் பதக்கத்தையும், மலேஷியா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றது.

இதனிடையே, ஆண்களுக்கான 67kg கிலோ கிராம் எடைப் பிரிவில் மதுவன்த விஜேசிங்க 254kg கிலோ எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார். இதில் அவர் ஸ்னெட்ச் முறையில் 113kg கிலோ எடையையும், கிளீன் அண்ட் ஜேர்க் முறையில் 141kg கிலோ எடையையும் தூக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கான 61kg கிலோ கிராம் எடைப் பிரவில் பங்குகொண்ட நதீஷானி ராஜபக்ஷ வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.இதன்படி, இலங்கை இதுவரை ஒரு தங்கம் மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

முன்னதாக பெண்களுக்கான 45kg கிலோ கிராம் எடைப் பிரிவில் இலங்கையின் ஸ்ரீமாலி சமரகோன் தங்கப் பதக்கம் வெல்ல, ஆண்களுக்கான 61kg கிலோ கிராம் எடைப் பிரிவில் திலங்க பலகசிங்ஹ வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி the papare

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...