போலாந்து மற்றும் இலங்கைக்கிடையிலான நேரடி விமான சேவை ஆரம்பம்!

Date:

போலாந்து மற்றும் இலங்கைக்கிடையிலான நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய போலாந்தின் ஒர்சோ நகரத்தின் செப்பின் சர்வதேச விமான Warsaw Chopin Airport நிலையத்தில் இருந்து முதலாவது விமானம் நேற்று (08) அதிகாலை 5.35 மணிக்கு இலங்கையை வந்தடைந்துள்ளது.

இந்த விமானத்தில் 230 பயணிகள் பயணித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரையில் இந்த விமான சேவை இலங்கை மற்றும் போலாந்துக்கிடையில் இடம்பெறவுள்ளது.இதேவேளை இந்த விமான சேவையின் மூலம் மேற்கு ஐரோப்பா ஸ்கன்டிநேவியா நாடுகள், போல்டிக் நாடுகள் மற்றும் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய விமான பயணிகள் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமான சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு நடைபெறும். அதாவது செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பேணுவதில் முன்மாதிரியாகத் திகழும் புத்தளம்.

நேற்று நடைபெற்ற அருட்தந்தை திலங்க அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு! புத்தளம் மாவட்ட சர்வ...

இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஈரான் மற்றும் வளைகுடா வான் பரப்பில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்...

காசாவில் மீண்டும் உயிர்பெற்ற பல்கலைக்கழகக் கல்வி: நீண்ட இடைவேளைக்குப் பின் கூடார வகுப்பறைகளுக்குத் திரும்பிய காசா மாணவர்கள்.

போரினால் நீண்டகாலமாக முடக்கப்பட்டிருந்த உயர்கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்கும் நோக்கில், தெற்கு...