ராபன் தீவு சிறையின் சாவியை அமெரிக்க நிறுவனம் ஏலம் விடுவதற்கு தென்னாப்பிரிக்கா எதிர்ப்பு!

Date:

தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த ராபன் தீவு சிறையின் சாவியை அமெரிக்க நிறுவனம் ஏலம் விடுவதற்கு அந் நாட்டு அரசு எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து தென் ஆப்பிரிக்க கலை மற்றும் கலாசாரத் துறை அமைச்சா் நதிம்தெத்வா கூறியதாவது:

நெல்சன் மண்டேலா 14 ஆண்டுகள் வைக்கப்பட்டிருந்த ராபன் தீவு சிறையின் சாவியை அமெரிக்காவைச் சோ்ந்த கியூா்ன்சேஸ் ஆக்ஷன்ஸ் நிறுவனம் வரும் ஜனவரி 28 ஆம் திகதி ஏலத்துக்கு விடுவது கண்டனத்துக்குரியது.தென் ஆப்பிரிக்காவின் வலி மிகுந்த வரலாறு, அதன் நினைவுச் சின்னங்கள் அனைத்தும் தென் ஆப்பிரிக்காவுக்குச் சொந்தமானவை.
எங்களுடன் கலந்தாலோசிக்காமல் எங்களின் நினைவுச் சின்னமான ராபன் தீவு சிறைச் சாவி ஏலத்துக்கு விடப்படக் கூடாது. எனவே, அந்த ஏலத்தைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

மேலும், அந்தச் சிறையின் உண்மையான சாவி எங்களிடம் உள்ளதால், ஏலத்தில் விடப்படுவது போலியாக இருக்குமா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம் என்றாா் அவா்.

தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிறவெறி ஆட்சிக்கு எதிராகப் போராடிய நெல்சன் மண்டேலா, அதற்காக 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். அதில் 18 ஆண்டுகளை ராபன் தீவிலுள்ள சிறையில் அவா் கழித்தாா். பின்னா் நிறவெறி ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, நாட்டின் முதல் கருப்பினா் ஜனாதிபதியாக அவா் கடந்த 1994 ஆம் ஆண்டு பொறுப்பேற்றாா். தற்போது ராபன் தீவுச் சிறைச்சாலை அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...