சீமெந்து நிறுவனங்களினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலைக்கு அதிகமாக சீமெந்தை விற்பனை செய்வதனை கண்டறிவதற்கான சுற்றி வளைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.
அதிக விலைக்கு சீமெந்தை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறித்த அதிகார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.தற்போது 50 கிலோகிராம் நிறையுடைய ஒரு மூட்டை சீமெந்து 1275 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும் குறித்த விலைக்கு அதிகமாக சீமெந்து விற்பனை செய்யப்படுவதாக பல பிரதேசங்களிலும் நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளார்கள்.