அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தை தாக்கிய சூறாவளி ; இதுவரையில் 84 பேர் உயிரிழப்பு!

Date:

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தை தாக்கிய சூறாவளிப் புயலில் இதுவரையில் 84 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மாகாணத்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி , மீட்பு பணிகளை துரிதப்படுத்தி ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் இல்லினாய்ஸ், மிஸ்சோரி, டென்னிஸ்ஸி, அர்கான்சாஸ், மிஸிசிப்பி உள்ளிட்ட 7 மாகாணங்களை வரலாறு காணாத சூறாவளிக் காற்று புரட்டிப் போட்டது. கென்டக்கி மாகாணத்தில் மட்டும் ஒரே இரவில் 18 முறை சூறாவளிக் காற்று தாக்கியதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மணிக்கு குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கிட்டங்கிகள் மரங்கள் என அனைத்தும் சூறாவளிக்காற்றில் நாலாபுறம் சிதறி உருக்குலைந்தன.

புயல் காற்றில் மெழுகுவர்த்தி தொழிற்சாலையின் மேற்கூரை விழுந்த சம்பவத்தில் பணியில் இருந்த 110 பேரில், 50 பேர் வரை உயிரிழந்ததாகவும் 58 பேரை காயங்களுடன் மீட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அமேசான் நிறுவன கிட்டங்கியின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்ததாகவும், பல்வேறு இடங்களில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதா தெரிவிக்கப்பட்டு உள்ளது. கென்டக்கி மாகாணத்தில் அவசரநிலையை பிரகடனப்படுத்தி உள்ள அதிபர் ஜோ பைடன், மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

டென்னிசி மாகாணத்தின் Nashville நகர குடியிருப்புப் பகுதியில் ராட்சத ஒலிபெருக்கி மூலம் அபாய ஒலி எழுப்பபட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு  வருவதாகவும் , ஏறத்தாழ இரண்டு இலட்சம் பேர் மின்சாரமின்றி தவித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...