அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தை தாக்கிய சூறாவளி ; இதுவரையில் 84 பேர் உயிரிழப்பு!

Date:

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தை தாக்கிய சூறாவளிப் புயலில் இதுவரையில் 84 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மாகாணத்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி , மீட்பு பணிகளை துரிதப்படுத்தி ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் இல்லினாய்ஸ், மிஸ்சோரி, டென்னிஸ்ஸி, அர்கான்சாஸ், மிஸிசிப்பி உள்ளிட்ட 7 மாகாணங்களை வரலாறு காணாத சூறாவளிக் காற்று புரட்டிப் போட்டது. கென்டக்கி மாகாணத்தில் மட்டும் ஒரே இரவில் 18 முறை சூறாவளிக் காற்று தாக்கியதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மணிக்கு குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கிட்டங்கிகள் மரங்கள் என அனைத்தும் சூறாவளிக்காற்றில் நாலாபுறம் சிதறி உருக்குலைந்தன.

புயல் காற்றில் மெழுகுவர்த்தி தொழிற்சாலையின் மேற்கூரை விழுந்த சம்பவத்தில் பணியில் இருந்த 110 பேரில், 50 பேர் வரை உயிரிழந்ததாகவும் 58 பேரை காயங்களுடன் மீட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அமேசான் நிறுவன கிட்டங்கியின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்ததாகவும், பல்வேறு இடங்களில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதா தெரிவிக்கப்பட்டு உள்ளது. கென்டக்கி மாகாணத்தில் அவசரநிலையை பிரகடனப்படுத்தி உள்ள அதிபர் ஜோ பைடன், மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

டென்னிசி மாகாணத்தின் Nashville நகர குடியிருப்புப் பகுதியில் ராட்சத ஒலிபெருக்கி மூலம் அபாய ஒலி எழுப்பபட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு  வருவதாகவும் , ஏறத்தாழ இரண்டு இலட்சம் பேர் மின்சாரமின்றி தவித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...