சதொச விற்பனையகங்களில் குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்கள்!

Date:

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று (12) முதல் மாதம் இறுதி வரையில் சதொச விற்பனையகங்களில் சில வகையான அரிசிகளை 100 ரூபாவுக்கு குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என வர்த்தக துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சதொச வர்த்தக நிலையங்களில் 50 அத்தியாவசிய பொருட்களை இன்று (12) முதல் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும் என்று நேற்று (11) ஊடக சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.

நாடு அரிசி 1Kg – 99 ரூபா 50 சதத்திற்கும் , சம்பா அரிசி 1Kg – 130 ரூபாவிற்கு சதொச விற்பனையகங்களில் விற்பனை செய்யப்படுகிறது.எந்த அரிசி வகைகளையும் தலா 5 kg அளவில் பெற்றுக் கொள்ள முடியும்.சீனி 1Kg 125 ரூபாவுக்கும் , பருப்பு 1Kg 240 ரூபாவுக்கும் , நூடில்ஸ் 125 ரூபாவுக்கும் ,சவர்க்காரம் உள்ளிட்ட 50 பொருட்களை சந்தையில் நிலவும் விலையை விடவும் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...