22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக மேலும் 2 மனுக்கள்

Date:

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேலும் இரு மனுக்களின் பிரதிகள் தமக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் ஆகஸ்ட் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் ஏழு மனுக்கள் கிடைத்திருந்ததாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஆகஸ்ட் 19ஆம் திகதி மூன்று மனுக்களின் பிரதிகளும், ஆகஸ்ட் 20ஆம் திகதி மேலும் நான்கு மனுக்களின் பிரதிகளும் தமக்கு கையளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் கிடைத்த மேலும் இரு மனுக்களுடன், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக இதுவரை மொத்தம் ஒன்பது மனுக்கள் சபாநாயகரிடம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில் இலங்கைக்கு 3ஆவது இடம்: சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் வாழ்த்து!

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள புனித ஹரம் ஷரீஃபில் நடைபெற்ற...

2027 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ பாடசாலை தவணை அட்டவணையை கல்வி, உயர்...

டிப்பருடன் – உழவு இயந்திரம் விபத்து: ஐவர் பலி

மொனராகலை, கும்பக்கன பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியொன்றும், டிராக்டர்...

பிற்பகலில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...