75 ஆண்டுகளில் நாடு எதிர்கொள்ளும் மிக மோசமான எல்நினோ

Date:

இவ்வாண்டின் இறுதியில் வரலாற்றில் மிக மோசமான எல்நினோ (El Niño) நிலவழியை எதிர்கொள்வதற்கான சாத்தியக்கூறு 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது கடந்த 75 ஆண்டுகளில் நாடு எதிர்கொள்ளும் மிக மோசமான எல்நினோ நிலையாக இருக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அஜித் விஜயமான்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த எல்நினோ நிலவரத்தை எதிர்கொள்ள அரசாங்கம் சிறந்த தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் தம்மிக பட்டபெதி தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக சிறிய குளங்கள் அனைத்தும் வற்றிப்போயுள்ளன.

கடந்த 35 ஆண்டுகளில் ஏற்பட்ட இந்த கடும் வறட்சியால் பொலன்னறுவை மாவட்டத்தில் மெடிரிகிரிய கும்குனா குளம், காமிணி குளம் உட்பட பல குளங்கள் வற்றிப்போய் நெற்பயிர்கள் அழிந்துபோயுள்ளன.

நீர்நிலைகள் வற்றியதால் கிராந்துருகோட்டே பகுதியில் யானைகள் கூட்டமாக உணவு மற்றும் நீர் தேடி வரத் தொடங்கியுள்ளன.

மொணராகலை மாவட்டத்தில் நிலவும் கடும் வெயில் காரணமாக காடுகளிலுள்ள புல்வெளிகள் மற்றும் தாவரங்கள் காய்ந்து நாசமாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கையில் டெங்கு மரணங்கள் 71 ஆக உயர்வு!

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 93,000...

‘கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா ‘வனாதே சத்து’ டுபாயில் கைது!

குற்றச் செயல்களில் ஈடுபடும் முக்கிய குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘கஞ்சிபானி இம்ரான்’...

சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை மாணவர் முஹம்மத் இம்தாத் உலகளவில் 3-ஆம் இடம் பிடித்து சாதனை!

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள புனித ஹரம் ஷரீஃப் பள்ளிவாசலில்...

உண்மை கசப்பானதாக இருக்கலாம், ஆயினும் அது ஒன்றாகவே நிலைத்திருக்கிறது.

ஒரு சமூகத்தின் மேலும் வீழ்ச்சியடைவது அரிதாகவே வெளிப்புற அழுத்தங்களால் ஏற்படுகிறது. மாறாக, நம்பிக்கையை...