அமெரிக்காவில் புதிய வகை உருமாறிய ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்வடைந்துள்ளது.
ஏற்கனவே கலிபோர்னியா வந்த தென்னாப்பிரிக்கா பயணி ஒருவருக்கு ஒமிக்ரோன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து இரண்டு முறை தடுப்பூசி செலுத்தி அண்மையில் நிவ்யோர்க் சென்ற ஒருவருக்கும் கொலோரோடாவில் ஒருவருக்கும் ஒமிக்ரோன் பாதிப்பு இவ்வாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.நியூயோர்க் மாகாணத்தில் 5 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறித்த ஆளுனர் தெரிவித்துள்ளார்.இதனிடையே அமெரிக்கா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து , வெளிநாட்டவர் திரும்பச் செல்வதற்கு ஒரு நாளைக்கு முன்பு கொவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று ஐனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.