சீனாவில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியத்துவம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனையடுத்து சீனாவின் முக்கிய நகரங்களில் 5- ஜி தொழில்நுட்ப சேவையை பரவலாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. E-commerce மற்றும் கணினித் துறை சார்ந்த தொழில்களில் முதலீடு அதிகரித்திருப்பதாகவும் , சீனாவில் மக்களிடையே ஒன்லைன் மூலம் பொருட்கள் வழங்குவது கணிசமாக உயர்ந்திருப்பதாகவும் , அந் நாட்டு புள்ளியியல் துறை அறிவித்துள்ளது.
இதனையடுத்து, தகவல் தொடர்பு துறையில் முதலீடுகள் கணிசமாக உயரும் என அந் நாட்டு தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் இயக்குனரான ஸீ கன் (Xie cun) தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.