ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பு எதிரொலி -கட்டுப்பாடுகள் விதிக்க உலக நாடுகள் ஆலோசனை!

Date:

ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து உலக நாடுகள் பல்வேறு கட்டுபாடுகளை அமுல்படுத்த ஆலோசித்து வருகின்றன.இஸ்ரேலில் பூஸ்டர் டோசை கட்டாயமாக்கிய ஜனாதிபதி நப்தாலி பென்னட் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் மக்கள் வெளியே வரவும், ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றவும் அறிவுறுத்தியுள்ளார். அமெரிக்காவுடனான பயணங்களுக்கு தடை விதித்து, சிவப்பு பட்டியலில் சேர்த்து அறிவித்துள்ளார்.

மருத்துவ நிபுணர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அமெரிக்காவில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிப்பார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

நெதர்லாந்தில் ஜனவரி 14-ஆம் தேதி வரை கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒமிக்ரான் பரவல் அதிகம் காணப்படும் பிரிட்டனில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் கட்டுப்பாடுகளுக்கு வாய்ப்பில்லை என்றும் மருத்துவ வல்லுநர்கள் ஆலோசனைக்கு பின் அறிவிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் ஜாவித் தெரிவித்துள்ளார்.

சீனாவில் புதிதாக இரண்டு பேருக்கு ஒமிக்ரான் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சீனாவின் அரச செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுற்றுலாத்துறை வருமானமாக முதல் 10 மாதங்களில் 2,659 மில். டொலர்கள்

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் சுற்றுலாத்துறை வருமானமாக 2,659 மில்லியன்...

பொலித்தீன் பைகளுக்கு மாற்றாக காகிதப் பைகளுக்கு பரிந்துரை!

பொலித்தீன் பைகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளைத் தயாரிக்கும் முயற்சியில்...

மாணவர்கள் மீதான ஒடுக்குமுறை: பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் குற்றவாளி என தீர்ப்பு!

பங்களாதேஷ் வன்முறையில் இளைஞர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக்...

கெஹெலிய குடும்பத்திற்கு எதிராக 3 வழக்குகளில் குற்றப்பத்திரம் தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, மகள்...