திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்வதற்காக புதிய நிறுவனமொன்று நிறுவப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிசக்தி அமைச்சரினால் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு (Ceypetco) வழங்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய வை ட்ரின்கோ பெட்ரோலியம் டெர்மினல்ஸ் லிமிட்டட் (TRINCO Petroleum Terminals LTD) என்ற பெயரில் குறித்த நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது.
குறித்த தரப்பினருடன் ஒரு மாதத்திற்குள் இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.