நத்தார் தினத்தை முன்னிட்டு பிரதமர் மற்றும் தூதுவர்களுக்கு இடையே விசேட சந்திப்பு

Date:

இந்நாட்டின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்காக வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நத்தார் தின விசேட சந்திப்பு மற்றும் இரவு விருந்துபசார நிகழ்வு நேற்று (12) இரவு கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் இடம்பெற்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மற்றும் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.

நத்தார் தினத்தை முன்னிட்டு இவ்விசேட சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்ட தூதுவர்கள் தற்றும் உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட இராஜதந்திர சேவையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

குறித்த சந்தர்ப்பத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பவித்ராதேவி வன்னிஆராச்சி, அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர்களான கனக ஹேரத், தாரக பாலசூரிய, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த வீரசிங்க, சுரேன் ராகவன் மற்றும் பிரதமரின் செயலாளர் காமினி செனரத் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...