நாட்டில் மேலும் 4 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம்!

Date:

நாட்டில் ஒமிக்ரோன் தொற்று உறுதியான மொத்தம் நான்கு பேர் இதுவரையில்  அடையாளம் காணப்பட்டுள்ளனர்.ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.எதிர்காலத்தில் Omicron வைரஸ் தொற்றுக்கள் அதிகரிக்கலாம் என டாக்டர் ஜீவந்தர மேலும் எச்சரித்தார்.பூஸ்டர் கோவிட்-19 தடுப்பூசி அளவைப் பெறுமாறு பொதுமக்களை அவர் மேலும் வலியுறுத்தினார்.

இந்த மாத தொடக்கத்தில் தென்னாபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய ஒரு பெண்ணிடம் ஒமிக்ரோன் இலங்கையில் முதலில் கண்டறியப்பட்டது.வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

.

Popular

More like this
Related

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை...

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு.

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...

நாடு முழுவதும் பலத்த மழை, காற்று தீவிரமடையலாம்:மக்கள் அவதானம்

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12...

சீரற்ற வானிலை: உயர் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த....