புகையிரத நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நாளை வரை பிற்போடப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் இன்று (26) நள்ளிரவு முதல் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் தவிர்நது தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க போவதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் முன்னர் அறிவித்திருந்தது.இந் நிலையில் தொழிற்சங்க நடவடிக்கை நாளை (27) காலை 10 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், புகையிரத நிலைய அதிபர்கள் நாளை இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் இதன் இறுதி முடிவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.