51,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை

Date:

51,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை ஜனவரி 03 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரச அபிவிருத்தி அலுவலர்களாக இக்குழுவினர் நியமிக்கப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஓராண்டு பயிற்சி முடித்த 42,500 பேருக்கு முதலில் நியமனம் வழங்கப்படும் எனவும் மீதமுள்ளவர்கள் ஓராண்டு பயிற்சி முடித்த பின்னர் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் திகதி நியமிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது.

22,000 நிரந்தர அரச உத்தியோகத்தர்கள் ஆசிரியர் தொழிலில் இணைந்து கொள்ள விரும்புவதாகவும் அமைச்சர் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டை வந்தடைந்தார் IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர்!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, மூன்று நாள்...

பொது பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும்: ஐ.தே.க. அறிக்கை

சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவியின் கொலையைக் கண்டித்து ஐக்கிய...

பங்களாதேஷ் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்பு!

பங்களாதேஷ் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை (பிப். 17) பதவியேற்கிறாா். பங்களாதேஷ்...

கொழும்பு-புத்தளம் ரயில் பாதை முழுமையாக திறப்பு!

கொழும்பு-புத்தளம் ரயில் பாதையில் ரயில் சேவைகள் இன்று (16) அதிகாலை முழுமையாக...