ACJU மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் இடையில் சிநேகபூர்வ சந்திப்பு!

Date:

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் நிறுவனத்தின் தூதுக் குழு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைமையகத்திற்கு நேற்று (06) சிநேகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது.

இச் சந்திப்பின் போது ஜம்இய்யாவின் அறிமுகம் அவர்களுக்கு வழங்கப்பட்டதோடு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு இடையில் இருக்கும் ஒத்துழைப்பு பற்றியும் இந் நாட்டில் சகவாழ்வை கட்டியெழுப்புவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இதில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொஹிதீன், திருச்சி மாவட்ட அரச காழி மவ்லவி ஜலீல் சுல்தான் உட்பட அதன் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர். ஜம்இய்யா சார்பில் கௌரவத் தலைவர் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் உட்பட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இதன்போது ஜம்இய்யாவின் வெளியீடுகளும் அவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தகவல்: அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஊடகப் பிரிவு.

Popular

More like this
Related

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம்

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களும் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் சட்டங்களைத் திருத்துவதற்கு பல...

தரமற்ற தடுப்பூசி இறக்குமதி:கெஹெலியவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல்...

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட முகமது சுஹைல் விடுதலை!

சமூக ஊடகங்களில் இஸ்ரேலுக்கு எதிரான பதிவை வெளியிட்டதற்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்...

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 9 மணிநேர நீர்வெட்டு

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல பகுதிகளுக்கு எதிர்வரும்...