Breaking News: இந்திய ராணுவ தலைமை அதிகாரி சென்ற ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது!

Date:

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் இராணுவ உயர் அதிகாரிகள் சென்ற விமானப் படை ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெலிங்டன் இராணுவ கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து இரு ஹெலிகொப்டர்கள் புறப்பட்டுச் சென்ற போது ஒரு ஹெலிகொப்டர் குன்னூர் அருகே விபத்தில் சிக்கியுள்ளது.குறித்த ஹெலிகொப்டரில் முப்படைத் தளபதி விபின் ராவத் சென்றதாகக் கூறப்படுகிறது. எனினும் உயிரிழப்புக்கள் தொடர்பில் எதுவும் உறுதியாக பதிவாகவில்லை.

ஹெலிகொப்டர் வீழ்ந்த இடத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.4 சடலங்கள் இதுவரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் ,3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விபத்தில் சிக்கிய ஹெலிகொப்டரில் 14 பேர் பயணம் செய்ததாகவும் அதில் 4 இராணுவ உயர் அதிகாரிகள் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Popular

More like this
Related

33 ஆண்டுகளுக்குப் பின் அபூர்வ நிகழ்வு: அரஃபாத் நன்னாளில் புனித காபாவிற்கு நேர் உச்சியில் தோன்றும் சூரியன்!

இஸ்லாமிய நாட்காட்டியின் மிக முக்கியமான மற்றும் புனிதமான நாளான அரஃபாத் தினத்தில் ...

ஹஜ் பெருநாள் எதிரொலி: மேற்கு வங்க பாரதிய ஜனதா கட்சி அரசின் புதிய கால்நடை கட்டுப்பாடுகளால் இந்து வியாபாரிகள் கடும் கடன் சுமை!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி...

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு பிணையில் செல்ல அனுமதி

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். தலங்கம பொலிசாரினால் இன்று...

ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடுகள்

எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள ஹஜ் பெருநாளை முன்னிட்டு...