Update: மெக்சிகோ கண்டெய்னர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வு!

Date:

மெக்சிக்கோவில் அகதிகளை ஏற்றிக் கொண்டு சென்ற கண்டெய்னர் லொரி கவிழ்ந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வடைந்துள்ளது.

கவுதமாலா உள்ளிட்ட மத்திய அமெரிக்கா நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக அகதிகள் உட்பட பலரை ஏற்றிக் கொண்டு மெக்சிக்கோவின் சய்பாஸ் மாகாணம் வழியாக அமெரிக்கா எல்லைக்குச் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் ஆபத்தான வளைவை கடக்க முயற்சித்த போதே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திலேயே 53 பேர் பரிதாபமாக உயிரிழந்ததோடு , 58 பேர் படுகாயம் அடைந்ததாகவும் நேற்றைய தினம் (10) தெரிவிக்கப்பட்டது.தற்போது 55 உயிரிழப்புக்கள் மற்றும் 105 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அவசர சிகிச்சை பிரிவில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு விபத்து குறித்து தீவிர விசாரணை இடம்பெற்று வருவதாகவும் மெக்சிகோ இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Popular

More like this
Related

நாடு முழுவதும் பலத்த மழை, காற்று தீவிரமடையலாம்:மக்கள் அவதானம்

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12...

சீரற்ற வானிலை: உயர் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த....

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...