எதிர்வரும் 30 ஆண்டுகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதார வளர்ச்சி திட்டம்- சீனா அரசு முடிவு!

Date:

சீனாவில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியத்துவம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனையடுத்து சீனாவின் முக்கிய நகரங்களில் 5- ஜி தொழில்நுட்ப சேவையை பரவலாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. E-commerce மற்றும் கணினித் துறை சார்ந்த தொழில்களில் முதலீடு அதிகரித்திருப்பதாகவும் , சீனாவில் மக்களிடையே ஒன்லைன் மூலம் பொருட்கள் வழங்குவது கணிசமாக உயர்ந்திருப்பதாகவும் , அந் நாட்டு புள்ளியியல் துறை அறிவித்துள்ளது.

இதனையடுத்து, தகவல் தொடர்பு துறையில் முதலீடுகள் கணிசமாக உயரும் என அந் நாட்டு தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் இயக்குனரான ஸீ கன் (Xie cun) தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...