சிலியில் காட்டிலிருந்த குடியிருப்பு பகுதிக்குள் பரவிய காட்டுத் தீயினால் 120 க்கும் மேற்பட்ட வீடுகள் உருக்குலைந்தன.
செய்லோதீவின் வன பகுதியில் பற்றிய காட்டுத் தீ மெல்ல மெல்ல நகர்ந்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.தீ விபத்தில் 120 க்கும் மேற்பட்ட வீடுகள் உருக்குலைந்தன.தீ விபத்து மற்றும் வீடுகளில் உள்ள பொருட்களை மீட்க போராடிய மக்களிடையே ஏற்பட்ட அவசரத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.
கடும் போராட்டங்களுக்கு மத்தியில் 300 க்கும் மேற்பட்ட வீரர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.