பாகிஸ்தானின் பண்பாடு இலங்கையில் இல்லை -அவையில் சி.சிறிதரன் !

Date:

கடந்த டிசம்பர் (03) வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் சியல்கோட்டில் வைத்து கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இலங்கை நபரான பிரியந்த குமாரவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.

” அண்மையில் பாகிஸ்தானில் மிக கொடூரமாக செய்யப்பட்ட பிரியந்த குமாரவிற்கும் அவருடைய குடும்பத்திற்கும் இந் நேரத்தில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.இவ்வாறான சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெற்றுள்ளன.விடுதலைப் புலிகளின் தளபதியாக இருந்த ரமேஷ் வெட்டிக் கொல்லப்பட்டார்.இது குறித்த படங்களும் வெளியாகியிருந்தன.இசைப் பிரியா, பாலச்சந்திரன் போன்றவர்களும் அந்த காலத்தில் படுகொலை செய்யப்பட்டதையும் அது குறித்த படங்களும் வெளியாகியிருந்தன என சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

பிரியந்தவின் மரணத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மன்னிப்பு கோரியிருந்தார். இலங்கையில் இவ்வளவு மரணங்கள் ஏற்பட்டும் மன்னிப்பு கோரும் அந்த பண்பாடு இல்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...