போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் மற்றும் கௌரவ பிரதமருக்கு இடையில் சந்திப்பு!

Date:

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி செய்யதினா முஹத்தல் செய்ஃபத்தின் சஹப் அவர்கள் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இன்று (11) அலரி மாளிகையில் சந்தித்தார்.

உலகம் முழுவதும் வாழும் சுமார் மில்லியன் கணக்கான போரா சமூகத்தினருக்கு கலாநிதி செய்யதினா முஹக்கல் செய்ஃபுத்தின் செஹேப் அவர்களே தலைமை வகிக்கிறார்.

தான் நேசிக்கும் ஒரு நாடு என்ற ரீதியில் இலங்கைக்கு மீண்டும் விஜயம் செய்யக் கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைவதாக கலாநிதி செய்யதினா முஹத்தல் செய்ஃபுத்தின் சஹெப் அவர்கள் கௌரவ பிரதமரிடம் குறிப்பிட்டார்.

முழு உலகமும் கொவிட தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள குழவில் நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளமையை பாராட்டுவதாகவும் கலாநிதி செய்யதினா முஹத்தல் செய்ஃபத்தின் செஹெப் அவர்கள் தெரிவித்தார்.

வர்த்தக செயற்பாடுகளின் ஊடாக இந் நாட்டின் பொருளாதாரத்தை சுட்டியெழுப்புவதற்கு போரா சமூகத்தின் ஊடாக முன்னெடுத்தப்படும் பணியை இதன்போது கௌரவ பிரதமர் பாராட்டினார்.குறித்த சந்தர்ப்பத்தில் போரா ஆன்மீகத் தலைவர் உள்ளிட்டோரும் கௌரவ அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவர்களும் கவந்து கொண்டிருந்தார்,

பிரதமர் ஊடக பிரிவு

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...