மலரும் புது வருடத்தை முன்னிட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்து கொண்ட விசேட மத அனுஷ்டானம்!

Date:

மலரும் புது வருடத்துக்கு ஆசிர்வாதம் பெற்றுக்கொள்வதற்காக, வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புண்ணிய பூமியில் இடம்பெறுகின்ற மத அனுஷ்டானங்களில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், கிரிவெஹெர ரஜமஹா விஹாராதிபதி சங்கைக்குரிய கொபவக்க தம்மிந்த தேரர் அவர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்.

இன்று (31) பிற்பகல் கிரிவெஹெர ரஜமஹா விஹாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர், தம்மிந்த தேரரைச் சந்தித்து, தேரரின் நலன்களை விசாரித்தறிந்ததுடன் சிறு கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில், தென் மாகாண ஆளுநர் விலீ கமகே மற்றும் ருஹுணு கதிர்காமம் மஹா தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர ஆகியோர் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

 

Popular

More like this
Related

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம்

பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னையிலுள்ள...

50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின்...

குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...