ஆளுமைகள் நிறைந்த, கலீபத்துல் குலபா அப்துல் ஹமீதின் வாழ்வு முன்மாதிரிமிக்கது-முஸ்லிம் கவுன்ஸில் அனுதாபம்!

Date:

இஸ்லாமிய ஷாதுலிய்யா தரீக்காவின் கலீபத்துல் குலபாவும் முன்னணி இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவருமான மௌலவி ஜே. அப்துல் ஹமீத் அவர்களது மறைவு குறித்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்ஸில் அதன் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கின்றது.

கவுன்ஸில் விடுத்துள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மர்ஹும் சாஹுல் ஹமீத் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக ஷாதுலிய்யா தரீக்காவின் கலீபாவாகப் பணிபுரிந்து, அந்த அமைப்புக்கு முன்மாதிரியான தலைமைத்துவம் வழங்கினார்.

சமூகத்தின் ஐக்கியத்தில் தீவிர அக்கறை காட்டிய இவர், சிறந்த பேச்சாளரும் ஆவார். ஆளுமைகள் நிறைந்த இவரது வாழ்வு முன்மாதிரிமிக்கது. எல்லா அமைப்புகளையும் மதித்து தன் பணிகளை இவர் முன்னெடுத்திருந்தார்.

இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக இவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. அவரது மறுமை வாழ்வு சிறப்பாக அமைவதற்குப் பிரார்த்திப்பதோடு, இவரது மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு பொறுமையை அளிக்குமாறும் பிராத்திக்கின்றோம்.

என்.எம் அமீன்

தலைவர்

முஸ்லிம் கவுன்ஸில் ஒப் சிறிலங்கா

Popular

More like this
Related

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...