ஆளுமைகள் நிறைந்த, கலீபத்துல் குலபா அப்துல் ஹமீதின் வாழ்வு முன்மாதிரிமிக்கது-முஸ்லிம் கவுன்ஸில் அனுதாபம்!

Date:

இஸ்லாமிய ஷாதுலிய்யா தரீக்காவின் கலீபத்துல் குலபாவும் முன்னணி இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவருமான மௌலவி ஜே. அப்துல் ஹமீத் அவர்களது மறைவு குறித்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்ஸில் அதன் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கின்றது.

கவுன்ஸில் விடுத்துள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மர்ஹும் சாஹுல் ஹமீத் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக ஷாதுலிய்யா தரீக்காவின் கலீபாவாகப் பணிபுரிந்து, அந்த அமைப்புக்கு முன்மாதிரியான தலைமைத்துவம் வழங்கினார்.

சமூகத்தின் ஐக்கியத்தில் தீவிர அக்கறை காட்டிய இவர், சிறந்த பேச்சாளரும் ஆவார். ஆளுமைகள் நிறைந்த இவரது வாழ்வு முன்மாதிரிமிக்கது. எல்லா அமைப்புகளையும் மதித்து தன் பணிகளை இவர் முன்னெடுத்திருந்தார்.

இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக இவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. அவரது மறுமை வாழ்வு சிறப்பாக அமைவதற்குப் பிரார்த்திப்பதோடு, இவரது மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு பொறுமையை அளிக்குமாறும் பிராத்திக்கின்றோம்.

என்.எம் அமீன்

தலைவர்

முஸ்லிம் கவுன்ஸில் ஒப் சிறிலங்கா

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...