“ஏரோ மெக்சிகோ” ஊழியர்கள் ஏராளமானோருக்கு கொவிட் தொற்று ; 200 விமானங்களின் சேவை ரத்து!

Date:

மெக்சிகோவில் கொவிட் தொற்று அதிகரிப்பால்,சுமார் 200 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதனால் தொடர்ந்து 4 நாட்களாக விமான நிலையத்திலேயே பயணிகள் தவித்து வருகின்றனர்.

“ஏரோ மெக்சிகோ விமான நிறுவனத்தின் ஊழியர்களில் ஏராளமானோருக்கு தொற்று உறுதியானதால், கடந்த வெள்ளிக்கிழமை முதல் அதன் பெரும்பாலான விமானங்களின் சேவை உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால், விமான டிக்கெட் எடுத்தவர்கள் செய்வதறியாது, மெக்சிகோ சிட்டி விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர். உரிய நேரத்தில் செல்லாவிட்டால் தனது அமெரிக்க வேலை பறிபோகும், என பெண் ஒருவர் தனது வேதனையை தெரிவித்துள்ளார்.மேலும், விமான நிலையத்தில் தங்களுக்கு உணவுக்கு கூட சரியான ஏற்பாடு செய்யப்படவில்லை என பலரும் குற்றம்சாட்டியுள்ளார்கள்.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.reuters.com/world/americas/aeromexico-halts-flights-covid-domino-effect-hits-crews-union-2022-01-07/&ved=2ahUKEwiOjquYxqf1AhXyjOYKHeT1A5kQFnoECAUQAQ&usg=AOvVaw2-9zbvy9k5ldVghpWReMWH

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...