நாட்டில் காகிதங்களுக்கு தட்டுப்பாடு!

Date:

நாட்டில் காகிதங்களின் தட்டுப்பாடு காரணமாக தற்போது சகல பத்திரிகைத் தொழிற்துறையினரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர். நாட்டில் டொலர் தட்டுப்பாடு மற்றும் உலக அளவில் காகிதங்களின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்பன இதற்குப் பிரதான காரணங்களாக பத்திரிகைத் தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

செய்தித்தாள்களை அச்சிடுவதற்காக பயன்படுத்தப்படும் காகிதங்களின் விலையானது கடந்த மாதத்தை காட்டிலும் இந்த மாதம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒரு டன் காகிதம் 450 அமெரிக்க டொலராக காணப்பட்ட நிலையில் தற்போது 800 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் செய்தித்தாள்களின்‌ உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளதுடன் பத்திரிகை தொழில்துறையினர் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...