நான்கு கட்டங்களின் கீழ் நாடளாவிய ரீதியில் இன்று (24) 1 மணித்தியால மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையம் இயங்காமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.இதற்கமைய, பின்வரும் நான்கு கட்டங்களின் கீழ் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.
குழு (ஏ)-பி.ப 5.30 முதல் 6.30 வரை
குழு (பி) – பி.ப 6.30 முதல் 7.30 வரை
குழு (சி)பி.ப 7.30 முதல் 8.30 வரை
குழு (டி)-பி.ப 8.30 முதல் 9.30 வரை
எனினும் இது தொடர்பாக இலங்கை மின்சார சபை உத்தியோகபூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.