நியூயோர்க்கில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 19 பேர் உடல் கருகி பலி!

Date:

அமெரிக்காவின் நியூயோர்க்கில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 19 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

19 மாடி குடியிருப்பில் இரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தூங்கிக் கொண்டு இருந்த குழந்தைகள் உட்பட 19 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 32 பேர் உயிருக்கு போராடி வருகின்ற நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் அச்சம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் லேசான காயங்களுடன் 60 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://apnews.com/article/bronx-apartment-fire-62afe31a9da544625f65def5f19e15dc&ved=2ahUKEwiw3ens_6b1AhXdlNgFHfe2AMEQ0PADKAB6BAgEEAE&usg=AOvVaw1zo3vafB6I_PCUfRWnBdCW

Popular

More like this
Related

சுமாத்ரா தீவுகளில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை?

இந்து சமுத்திரத்தில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய...

மோசமான வானிலை: ஜனாதிபதி தலைமையில் விசேட பேச்சுவார்த்தை!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை, ஜனாதிபதி அநுர...

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை...

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு.

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...