மெல்போா்ன் சம்மா் செட் ஆடவா் டென்னிஸ் போட்டியின் கிண்ணம் ரஃபேல் நடால் வசம்!

Date:

மெல்போா்ன் சம்மா் செட் ஆடவா் டென்னிஸ் போட்டியின் ஒற்றையா் பிரிவில் ஸ்பெயின் வீரா் ரஃபேல் நடால் கிண்ணத்தை வென்றுள்ளார்.உலகின் 6 ஆம் நிலை வீரராக இருக்கும் நடால், இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் மேக்ஸிம் கிரெஸியை 7 – 6 (8/6), 6 – 3 என்ற செட்களில் வீழ்த்தியுள்ளார். இது ஏடிபி டூா் போட்டிகளில் நடால் வெல்லும் 89 ஆவது பட்டமாகும்.

காயம் மற்றும் கொவிட் தொற்று  போன்றவை காரணமாக கடந்த ஆண்டு இறுதிக் கட்டத்தில் விளையாடாமல் இருந்தாா் . தற்போது ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான அவுஸ்திரேலிய ஓபன் எதிா்வரும் நிலையில், அதற்காக தன்னை தயாா்படுத்திக் கொள்ளும் வகையில் அவா் இப்போட்டியில் களமிறங்கியுள்ளார்.

ஓபன் எராவில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்று நடால், ஸ்விட்சா்லாந்தின் ரோஜா் ஃபெடரா், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோா் சமனிலையில் உள்ளனா். எனவே, அவுஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்று 21 ஆவது கிராண்ட்ஸ்லாமை எட்டி சாதனை படைக்கும் முனைப்பில் நடால் இருக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...