மேற்கு வங்காளத்தில் விரைவு புகையிரதம்  கவிழ்ந்து விபத்து

Date:

மேற்கு வங்காளத்தில் கவுகாத்தி- பிகேனிர் விரைவு புகையிரதம் தடம் புரண்டு விபத்திற்குள்ளானதில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

ராஜஸ்தானிலிருந்து அசாம் நோக்கிச் சென்ற கவுகாத்தி- பிகேனிர் விரைவு புகையிரதம் மேற்கு வங்க மாநிலத்தின் தோமாஹானி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ரெயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.

அதிகாரிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.புகையிரதம்  விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்றது.

இந்த விபத்தில் 4 பேர் பலியானதாகவும் 20 -க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்திருப்பதாகவும் முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டது. மேலும் காயம் அடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பிரதமர் மோடியுடன் பேசி, மீட்புப் பணிகள் குறித்த நிலைமையை விவரித்துள்ளதாகவும் விரைவான மீட்புப் பணிகளுக்கான நிலைமையை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது இந்த புகையிரதம் விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக வடகிழக்கு ரெயில்வே, தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் 45 க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...