ஒமிக்ரோன் வைரஸை சாதாரணமாக கருதி விடக் கூடாது ; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Date:

ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாலும், உயிரிழப்புகள் ஏற்படுவதாலும் அந்த வைரஸை சாதாரணமாக கருதக்கூடாது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்டா வைரஸை காட்டிலும் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு, குறிப்பாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு குறைந்த அளவிலேயே பாதிப்புகள் ஏற்பட்டு வந்தாலும், ஒமிக்ரோனின் அதிவேக பரவல் தன்மை தொற்று பாதிப்புகளை சுனாமி வேகத்தில் அதிகரிக்கச் செய்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால் உலகம் முழுவதும் உள்ள சுகாதார அமைப்புகளுக்கு அழுத்தம் அதிகரித்து வருவதாகவும் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...