கொழும்பு துறைமுக நகர நடை பாதை இன்று திறந்து வைக்கப்பட்டது!

Date:

கொழும்பு துறைமுக நகர நடைபாதை இன்று (09) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் சீனாவுக்கிடையிலான இராஜதந்திர உறவின் 65 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வின் போது குறித்த நடைபாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். 500 மீட்டர் தூரத்துக்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர நடைபாதையை நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தினந்தோறும் பொதுமக்கள் பயன்படுத்த முடியும். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் உள்ள நுழைவாயிலினூடாக உட்பிரவேசிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உத்தேச முஸ்லிம் விவாகரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை காதிமார் சம்மேளனத்தின் முன்மொழிவுகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக...

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

இலங்கை முழுவதும் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணி...