கொழும்பு துறைமுக நகர நடை பாதை இன்று திறந்து வைக்கப்பட்டது!

Date:

கொழும்பு துறைமுக நகர நடைபாதை இன்று (09) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் சீனாவுக்கிடையிலான இராஜதந்திர உறவின் 65 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வின் போது குறித்த நடைபாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். 500 மீட்டர் தூரத்துக்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர நடைபாதையை நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தினந்தோறும் பொதுமக்கள் பயன்படுத்த முடியும். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் உள்ள நுழைவாயிலினூடாக உட்பிரவேசிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...

இன்று உலக மது ஒழிப்பு தினம்!

மது அருந்துவதால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள்...

பாடசாலை பிளாஸ்டிக் பொருட்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயம்

2026 ஏப்ரல் 1 முதல் பாடசாலை மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அறிவிப்பு

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் (O/L) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான ஒன்லைன்...