உலகில் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான ஐந்து நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக அதிகரித்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.இது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பாரிய பின்புலமாகும்.
தடுப்பூசி விடயத்தில் இலங்கை பெருமளவில் முன்னணியில் உள்ளது.பின்னடைவு கண்டுள்ள நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் அனைத்துக் கட்சிகளினதும் ஒத்துழைப்பை அதிகரிப்பதன் தேவையையும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.