சோலைவனமாக மாறிய பாலைவனம் ;சவூதி அரேபியாவில் பனிப்பொழிவு! 

Date:

வெப்ப மண்டலத்தை கொண்டுள்ள சவுதி அரேபியாவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதை கூறினால் யாராலும் ஏற்றுக் கொள்வார்களா? இப்போது இதனை ஏற்றுக்கொண்டு தான் ஆகனும்.ஏனெனில் பாலைவன பூமியான சவூதி அரேபியாவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாலைவனத்துக்கும், கடும் வெப்பத்துக்கும் பெயர் பெற்ற வெப்ப மண்டல நாடான சவுதி அரேபியாவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சவூதி அரேபியாவின் வடமேற்கு நகரமான தபூக் நகரில் புத்தாண்டில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதாக அங்கு பணி பரிகின்றவர்களின் சமூக வலைத்தளங்களின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. அதன் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ஒரு வீடியோவில், பனிப்பொழிவு ஏற்பட்ட மகிழ்ச்சியில் சவுதி ஆண்கள் பாரம்பரிய நடனம் ஆடுவதைக் காணலாம். தபூக்கில் பனி பொழியும் காட்சிகள் இதற்கு முன்பும் ஏற்பட்டாலும், பனிப்பொழிவில் இது போன்று இசைக்கு ஏற்ப பாரம்பரிய நடனம் ஆடுபவர்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றனர்.

பனியால் மூடப்பட்ட மலை

தபூக் அருகே அமைந்துள்ள அல்-லாட்ஜ் மலையில் இந்த பனிப்பொழிவில் இன்பம் காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். கடந்த ஆண்டு பெப்ரவரி மாதமும் இப் பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. அப்போது பனிப்பொழிவு கடந்த 50 ஆண்டு கால சாதனையை முறியடித்திருந்தது. பிபிசி அறிக்கையின்படி, சவூதி அரசின் செய்தி நிறுவனமான SPA பனியால் மூடப்பட்ட கார்களின் படங்களை வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில் மக்கள் பனியை ரசிப்பதைக் காணலாம். ஜபல் அல்-லாஜ், ஜபல் அல்-தாஹிர் மற்றும் ஜபல் அல்கான் ஆகிய மலைகள் முற்றிலும் பனியால் மூடப்பட்டுள்ளன.அல்-லாஜ் 2,600 மீட்டர் உயரம் கொண்டது

ஒவ்வொரு ஆண்டும் சவூதி அரேபியாவில், ஜபல் அல்-லாஜ், ஜபல் அல்-தாஹிர் மற்றும் தபூக்கில் உள்ள ஜபல் அல்கான் மலைகள் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு பனிpபொழிவு ஏற்படுவதாக, அரபு செய்தித்தாள் Ashraq al-Awsat செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மலைகள் சவுதி அரேபியாவின் வடமேற்கு பகுதியில் உள்ளன. ஜபல் அல்-லாஜ் 2,600 மீட்டர் உயரம் கொண்டது. இந்த மலையின் சரிவுகளில் ஏராளமான பாதாம் மரங்கள் நடப்பட்டிருப்பதால் பாதாம் மலை என்றும் அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பருவங்களில் பனிப்பொழிவு ஏற்படுகிறது. தபூக் பகுதி ஜோர்டானை ஒட்டியுள்ளது. இந்த பகுதியில் பனி உருகிய பிறகு, காணப்படும் காட்சி ஒரு அழகான காட்சி ஆகும்.

பனிப்பொழிவால் ஆச்சர்யம் அடைந்த மக்கள்.

சவுதி அரேபியாவில் கடும் பனிப்பொழிவு வளைகுடா நாடுகளுக்கு மிகவும் அரிதான நிகழ்வாக கூறப்படுகிறது. ஏனென்றால் சில காலத்திற்கு முன்பு இங்கு பனிக் காலம் வந்து விட்டது. இரவு நேரங்களில் குளிர்ந்த காற்று வீசுவதால் பல பகுதிகளில் வெப்பம் எதிர்மறையை எட்டுகிறது. அதே சமயம், புலப்பாடு குறைவாக இருப்பதால், மக்கள் விழிப்புடன் இருக்குமாறு சவூதி அரேபியாவின் சிவில் டிஃபென்ஸ் எச்சரித்துள்ளது. ரியாத், மக்கா, மதீனா, கிழக்கு மாகாணம் அல்-பஹா, ஆசிர், ஜசான், அல்-காசிம், தபூக், அல்-ஜவுஃப், ஓலா ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...