நாட்டில் தடையின்றி மின்சார விநியோகத்தை தொடர்ந்து வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!

Date:

நாட்டில் தடையின்றி மின்சார விநியோகத்தை தொடர்ந்து வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துறை சார் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.மின்சார துண்டிப்பு தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(10) இடம்பெற்றது.இக் கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி குறித்த பணிப்புரையை தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் மின்சாரத்தைத் துண்டிக்காது, தொடர்ந்து விநியோகத்தை மேற்கொள்வதற்கே எதிர்பார்க்கப்படுகின்றது.முடியுமான அளவு மின்சாரத்தை விநியோகிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.எவ்வாறு தடையின்றி மின்சார விநியோகத்தை மேற்கொள்வது என்பது தொடர்பில் மின்சார சபை மற்றும் கனியவள கூட்டுத்தாபனத்தின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் ஆராயப்பட்டது.தடையின்றி தேவையான எண்ணெய்யை வழங்குவதற்கு கனியவள கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார சபையிடம் இருந்து பாரிய தொகை கனியவள கூட்டுத்தாபனத்திற்குச் செலுத்தப்பட வேண்டும்.வங்கிகளிடமிருந்து பணத்தைப் பெற்று அந்த தொகையைச் செலுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை...

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு.

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...

நாடு முழுவதும் பலத்த மழை, காற்று தீவிரமடையலாம்:மக்கள் அவதானம்

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12...

சீரற்ற வானிலை: உயர் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த....