பிரதமர் தலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்

Date:

NEWS NOW:- கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (16) அங்கு வழிபாட்டில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.

தலதா மாளிகைக்கு விஜயம் செய்த கௌரவ பிரதமர் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல அவர்களினால் வரவேற்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து கௌரவ பிரதமர் அவர்கள் வழிபாட்டில் ஈடுபட்டார்.

வழிபாட்டில் ஈடுபட்டதை தொடர்ந்து கௌரவ பிரதமர் அவர்கள் மல்வத்து மஹா விகாரை பீட மஹாநாயக்கர் வணக்கத்திற்குரிய திப்படுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.

அனுசாசனத்தை தொடர்ந்து வணக்கத்திற்குரிய தேரர் அவர்கள் கௌரவ பிரதமருக்கு புத்தர் சிலையொன்றை பரிசளித்தார்.

வழிபாட்டில் கௌரவ பிரதமருடன் மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி  லலித் யூ கமகே, இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்தே, பாராளுமன்ற உறுப்பினர்களான வசந்த யாப்பா பண்டார, குணதிலக ராஜபக்ஷ, உதயன சாமிந்த கிரிந்திகொட, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல உள்ளிட்ட மக்கள் பிரதிநிகள் பலர் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

 CNCI தங்க மற்றும் உயர் சாதனையாளர் 2025  விருதுகளை வென்ற ஹலால் கவுன்சில்

கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இலங்கை தேசியத்...

யாழ். செல்வா கலையரங்கில் நடைபெற்ற வடக்கு முஸ்லிம் இடம்பெயர்ந்தோர் கூட்டம்.

வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட 35ஆவது வருடத்தை நினைவுகூர்ந்து  31...

10 மாதங்களில் 18 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் கடந்த ஒக்டோபர் மாதம் 29 ஆம்...

இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் மற்றும் முஸ்லிம் சமய திணைக்களம் ஆகியன இணைந்து நடாத்தும் தேசிய ரீதியிலான அல்குர்ஆன் மனனப் போட்டி!

இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்...