ஸ்மார்ட் தொலைபேசி கையடக்கத் தொலைபேசியின் ஊடாக, QR CODE நடைமுறையை பயன்படுத்தி, கட்டணம் செலுத்தும் நவீன முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
தனியார் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த புதிய நடைமுறையை அறிமுகப்படுத்துவதற்கான அனுமதி இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என அவர் தெரிவிக்கின்றார்.
இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாட தாம் எதிர்பார்த்துள்ளதாகவும், விரைவில் அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்வதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.