மெல்போா்ன் சம்மா் செட் ஆடவா் டென்னிஸ் போட்டியின் கிண்ணம் ரஃபேல் நடால் வசம்!

Date:

மெல்போா்ன் சம்மா் செட் ஆடவா் டென்னிஸ் போட்டியின் ஒற்றையா் பிரிவில் ஸ்பெயின் வீரா் ரஃபேல் நடால் கிண்ணத்தை வென்றுள்ளார்.உலகின் 6 ஆம் நிலை வீரராக இருக்கும் நடால், இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் மேக்ஸிம் கிரெஸியை 7 – 6 (8/6), 6 – 3 என்ற செட்களில் வீழ்த்தியுள்ளார். இது ஏடிபி டூா் போட்டிகளில் நடால் வெல்லும் 89 ஆவது பட்டமாகும்.

காயம் மற்றும் கொவிட் தொற்று  போன்றவை காரணமாக கடந்த ஆண்டு இறுதிக் கட்டத்தில் விளையாடாமல் இருந்தாா் . தற்போது ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான அவுஸ்திரேலிய ஓபன் எதிா்வரும் நிலையில், அதற்காக தன்னை தயாா்படுத்திக் கொள்ளும் வகையில் அவா் இப்போட்டியில் களமிறங்கியுள்ளார்.

ஓபன் எராவில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்று நடால், ஸ்விட்சா்லாந்தின் ரோஜா் ஃபெடரா், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோா் சமனிலையில் உள்ளனா். எனவே, அவுஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்று 21 ஆவது கிராண்ட்ஸ்லாமை எட்டி சாதனை படைக்கும் முனைப்பில் நடால் இருக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...