மெல்போா்ன் சம்மா் செட் ஆடவா் டென்னிஸ் போட்டியின் கிண்ணம் ரஃபேல் நடால் வசம்!

Date:

மெல்போா்ன் சம்மா் செட் ஆடவா் டென்னிஸ் போட்டியின் ஒற்றையா் பிரிவில் ஸ்பெயின் வீரா் ரஃபேல் நடால் கிண்ணத்தை வென்றுள்ளார்.உலகின் 6 ஆம் நிலை வீரராக இருக்கும் நடால், இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் மேக்ஸிம் கிரெஸியை 7 – 6 (8/6), 6 – 3 என்ற செட்களில் வீழ்த்தியுள்ளார். இது ஏடிபி டூா் போட்டிகளில் நடால் வெல்லும் 89 ஆவது பட்டமாகும்.

காயம் மற்றும் கொவிட் தொற்று  போன்றவை காரணமாக கடந்த ஆண்டு இறுதிக் கட்டத்தில் விளையாடாமல் இருந்தாா் . தற்போது ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான அவுஸ்திரேலிய ஓபன் எதிா்வரும் நிலையில், அதற்காக தன்னை தயாா்படுத்திக் கொள்ளும் வகையில் அவா் இப்போட்டியில் களமிறங்கியுள்ளார்.

ஓபன் எராவில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்று நடால், ஸ்விட்சா்லாந்தின் ரோஜா் ஃபெடரா், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோா் சமனிலையில் உள்ளனா். எனவே, அவுஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்று 21 ஆவது கிராண்ட்ஸ்லாமை எட்டி சாதனை படைக்கும் முனைப்பில் நடால் இருக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுமாத்ரா தீவுகளில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை?

இந்து சமுத்திரத்தில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய...

மோசமான வானிலை: ஜனாதிபதி தலைமையில் விசேட பேச்சுவார்த்தை!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை, ஜனாதிபதி அநுர...

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை...

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு.

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...