ஆளுமைகள் நிறைந்த, கலீபத்துல் குலபா அப்துல் ஹமீதின் வாழ்வு முன்மாதிரிமிக்கது-முஸ்லிம் கவுன்ஸில் அனுதாபம்!

Date:

இஸ்லாமிய ஷாதுலிய்யா தரீக்காவின் கலீபத்துல் குலபாவும் முன்னணி இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவருமான மௌலவி ஜே. அப்துல் ஹமீத் அவர்களது மறைவு குறித்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்ஸில் அதன் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கின்றது.

கவுன்ஸில் விடுத்துள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மர்ஹும் சாஹுல் ஹமீத் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக ஷாதுலிய்யா தரீக்காவின் கலீபாவாகப் பணிபுரிந்து, அந்த அமைப்புக்கு முன்மாதிரியான தலைமைத்துவம் வழங்கினார்.

சமூகத்தின் ஐக்கியத்தில் தீவிர அக்கறை காட்டிய இவர், சிறந்த பேச்சாளரும் ஆவார். ஆளுமைகள் நிறைந்த இவரது வாழ்வு முன்மாதிரிமிக்கது. எல்லா அமைப்புகளையும் மதித்து தன் பணிகளை இவர் முன்னெடுத்திருந்தார்.

இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக இவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. அவரது மறுமை வாழ்வு சிறப்பாக அமைவதற்குப் பிரார்த்திப்பதோடு, இவரது மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு பொறுமையை அளிக்குமாறும் பிராத்திக்கின்றோம்.

என்.எம் அமீன்

தலைவர்

முஸ்லிம் கவுன்ஸில் ஒப் சிறிலங்கா

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...