ஒமிக்ரோன் வைரஸை சாதாரணமாக கருதி விடக் கூடாது ; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Date:

ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாலும், உயிரிழப்புகள் ஏற்படுவதாலும் அந்த வைரஸை சாதாரணமாக கருதக்கூடாது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்டா வைரஸை காட்டிலும் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு, குறிப்பாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு குறைந்த அளவிலேயே பாதிப்புகள் ஏற்பட்டு வந்தாலும், ஒமிக்ரோனின் அதிவேக பரவல் தன்மை தொற்று பாதிப்புகளை சுனாமி வேகத்தில் அதிகரிக்கச் செய்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால் உலகம் முழுவதும் உள்ள சுகாதார அமைப்புகளுக்கு அழுத்தம் அதிகரித்து வருவதாகவும் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...