டெங்கு வைரஸில் மாற்றம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Date:

டெங்கு வைரஸில் மாற்றம் ஏற்பட்டிருக்கக் கூடும் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

அதற்கமைய தற்போது நோய் அறிகுறிகள் வெளிப்படுத்தப்படும் காலத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்காரணமாக 24 மணித்தியாலங்களுக்கு மேல் நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் வைத்தியரின் உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், காய்ச்சலுக்கு மருத்துவரின் ஆலோசனையின்றி பாரசிட்டமோல் மாத்திரையை தவிர வேறு எந்த மருந்தையும் உட்கொள்ளக் கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,50 சதவீதமானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் 48 வீதமானனோர் கொழும்பைச் சேர்ந்தவர்களாவர்.

மேல் மாகாணத்தில் களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களைத் தவிர ஏனைய மாகாணங்களிலுள்ள குறிப்பிட்ட சில மாவட்டங்களில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அத்தோடு யாழ்ப்பாணம், புத்தளம், காலி, இரத்தினபுரி, திருகோணமலை, மற்றும் மட்டகளப்பு ஆகிய மாவட்டங்களிலும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை அனைவரும் டெங்கு நுளம்பு பரவ இடமளிக்காத வகையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...