பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்: தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்!

Date:

பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை உயர்வு, எரிபொருள் செலவு மற்றும் பழுதுபார்ப்பு செலவுகள் அதிகரிப்பதால் போக்குவரத்து துறை ஊழியர்களின் வருவாயை நேரடியாக பாதிக்கும் என அதன் பொதுச் செயலாளர் அஞ்சனா பிரியஞ்சித் தெரிவித்தார்.

இதேவேளை ஜூலை மாதம் வரை பேருந்து கட்டணத்தை மாற்றியமைப்பதாக தாங்கள் ஒருபோதும் அரசாங்கத்திற்கு வாக்குறுதி அளிக்கவில்லை என அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

எனவே இதற்கு தீர்வு வழங்கப்படாவிட்டால், திங்கட்கிழமைக்குள் பொது போக்குவரத்து துறை ஸ்தம்பிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...