அதிவேகமாக ஓட்டிய பஸ் சாரதிக்கு பாடம் கற்பித்த பயணிகள்!

Date:

(File Photo)

கந்தளாய் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்றையதினம் ஒரே திசையில் போட்டிப்போட்டு பயணித்த 2 பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்று, அதே பாதையில் பயணித்த (சி.டி.பி) இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸை முந்திச் செல்ல முடியாத வகையில் வீதியை மறித்தமையால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தின் பின்னர், தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர், சி.டி.பி பஸ் சாரதியைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, சி.டி.பி பஸ்ஸில் இருந்த பயணிகள் ஆத்திரமடைந்து, தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கத் தொடங்கியுள்ளனர்.

பயணிகளிடமிருந்து தப்பிக்க, அவர்கள் இருவரும் கந்தளாய் பொலிஸ் நிலையத்திற்குள் ஓடியதுடன் அவர்கள் பொலிஸாரார் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து சி.டி.பி பஸ்ஸின் சாரதி கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Popular

More like this
Related

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் போலி அழைப்புகள்!

தனிநபர் விபரங்களைப் பெற்று நிதி மோசடி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட சில...

ருஹுனு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக ஜயசிங்கவின் தந்தை காலமானார்

ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிங்கள ஆய்வுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக...

900 பேருக்கு மருத்துவ சேவை: பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்க MFCD மற்றும் ஜப்பான் நிறுவனங்களின் கூட்டு முயற்சி

'டிட்வா'   புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக நடத்தப்பட்ட இறுதி கட்ட தொற்றா நோய்கள்...

மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெற்றது குற்றப்புலனாய்வுத் திணைக்களம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாரியாரான மைத்ரி விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம்...