Sl Vs AUS T20 Updates: இலங்கை அணிக்கு 155 ஓட்டங்கள் வெற்றி இலக்கு: போட்டி தொடர்கிறது!

Date:

அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 5 ஆவதும், இறுதியுமான போட்டி இன்று பகலிரவு ஆட்டமாக மெல்பர்னில் நடைபெற்று வருகிறது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணியின் தலைவர் ஆரொன் பின்ச், முதலில் துடுப்பாட தீர்மானித்தார்.

அதன்படி, முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

போட்டியில் அதிகபடியாக மெத்யூ வேட் 43 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.இலங்கை அணியின் பந்து வீச்சில் துஸ்மந்த சமீர மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்கள்.

இந் நிலையில், 155 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட இலங்கை அணி களமிறங்கியுள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...